Tuesday, June 15, 2010

சும்மா இருத்தல், கடவுள் இருக்குமிடம்


சமீபத்தில் வாசித்தபோது இரண்டு கவிதைகள் நினைவைவிட்டு அகலவேயில்லை அவைளை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

கடவுள் இருக்குமிடம் - அரவிந் அப்பாத்துரை , ‘பிரவாகினி -23” பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன செய்திமடல்.

சும்மாயிருத்தல் - உஷா ரவிக்குமார், குமுதம் (மீள்பிரசுரம் பிரவாகினி -23)
(தலைப்புக்கள் என்னால் இபட்டது)


கடவுள் இருக்குமிடம்

மனிதன் இல்லாத இடம்,
அங்கு கடவுள் இருக்கச் சாத்தியமில்லை.
ஏனெனில்,
கடவுளைப் பற்றிச் சிந்திப்பதும் தான்
கடவுளைப் பற்றி பேசுவதம் மனிதன்

கடவுளைப் புகழ்வதும் மனிதன் தான்.
கடவுளை ஏசுவதும் மனிதன் தான்.
கடவுளுக்குக் கோயில் கட்டுவதும் மனிதன் தான்.
மொத்தத்தில் கடவுள் எனப்படும் எண்ணக்கருவை வாழவைப்பதே மனிதன் தான்.
ஆக,
மனிதன் இல்லாத இடத்தில் கடவுள் இருக்கச் சாத்தியமில்லை

############





சும்மாயிருத்தல்

காலை எழுந்தவுடன் வாசல் துடைத்துக் கோலம் போட்டு
காப்பி, டீ, பூஸ்ட் எனத் தனித்தனியே கலந்து கொடுத்து
குளித்து வந்து, பூசையறை சுத்தம் செய்து, பூ வைத்து
கும்பிட்டு, விளக்கேற்றிக் கையோடு அடுப்பேற்றி
பொங்கலென்றால் கொத்சென்பார், இட்லிக்கு சாம்பார்தான்
புலவுக்கு பச்சடி என்றால் தோசைக்கு சட்டினி
மதியம் ‘லன்ச்’ கட்டிச் கொடுத்து அனுப்பிய உடன்தான் தளிகை
மாமிக்கு சாம்பாரும், சாற்றமுதும், கரமேதும்!
வீட பெருக்கித் துடைத்து விட்டு துணிகளையும் உலரவிட்டு
(வாஷிங் மெசின், வாக்குவம் க்ளீனர் இருக்கையில் ஆளெதற்கு?)

மடி மாமியார் இருப்பதினால் பாத்திரமும் தேய்த்தெடுத்து
மல்டி பர்ப்பஸ் வேறேதுமில்லை அடியேன்தான் பார்த்திடுவீர்!
நடுநடுவில் வெளியெ சென்று வரவும் எனக்கு வாய்ப்புண்டு
நாடகம் சினிமா இல்லை, மளிகைக் கடை, மார்க்கெட்டு
பில்லுகளைக் கட்டிவிட்டு, ப்ளம்பரையும் கூட்டி வந்து
ப்யூஸ் பல்பை நான் மாற்றி, இஸ்திரிக்கு துணி கொடுத்து
ரப்பர் பேண்டொ, ரீபில்லோ, ரெக்கார்ட் நோட்டோ வாங்கி வந்து
ரவை உப்புமா கிண்டி வைத்து, உலர்ந்த துணி மடித்து
சப்பாத்தி குருமா என இரவு சமையல் செய்து
செடிகளுக்கு நீர் ஊற்றி, மலர் கொய்து கட்டி வைத்து
சலிப்பில்லை, சந்தோஷம் தான் என் வாழ்க்கை.
அடிமனதில் ஒரு நெருடல் மட்டுமுண்டு
வீட்டினரை கேளுங்கள் என்னைப் பற்றி – சொல்வார்கள்
‘வேலைக்குப் போகவில்லை’ சும்மாதான் இருக்கிறாள்...!






No comments:

Post a Comment