Wednesday, December 28, 2011

வெற்றுக் குவளைகளும் வெறும் மனிதர்களும்

கதவிடுக்கிலிருந்து புறப்பட்ட காற்று
காவலரணைத் தாண்டி நின்று
காத்திருக்கிறது வெற்றுக் குவளையுடன்

காணாமல்ப் போன மனிதர்களையும்
களித்துக் குடித்த நாட்களையும் தேடி.....
காத்திருந்து....... காத்திருந்து....... காத்திருந்து......
தன் நினைவுகளை மீட்ட காற்று
களைப்படைந்தது ஒருநிமிடம்
கைவிடப்பட்ட உலகத்தில்
கவனிக்க ஆளின்றி
வெற்றுக் குவளைடன் எதிர் கொள்கிற்து
ஒவ்வொரு வெறும் மனிதர்களையும்

கனவான காலங்கள் காற்றுக்கு
மீண்டும் மீண்டும் தன் நண்பர்களைக்
நினைவுபடுத்தியபடி இருந்தது
காற்றின் நண்பர்கள் காலத்தின் நண்பர்களல்ல
அவர்களும் காற்றுத்தானே
போய்விட்டார்கள்
தனியாகவும் கூட்டாகவும்

காற்று மீண்டும் மீண்டும் தேடுகிறது
தனக்கான நணபர்களை
வெறுமையில்லாத நண்பர்களை
ஒவ்வொரு முடிவிலும் தோல்விதான்.
கனவான காலங்கள் காற்றுக்கு
மீண்டும் மீண்டும் தன் நண்பர்களைக்
நினைவுபடுத்தியபடி இருந்தது

காற்றுக்குக் கவலைதான்
தன்போலவே இருப்பதில் மகிழ்ச்சி கண்டது
தனக்கேயான கையாலாகத்தனத்துடன்

கடைசியில் காற்று
மீண்டுமொரு முறை பார்த்துக்கொள்கிறது!
வெற்றுக் குவளைகளை ஏக்கத்துடன்.......................................................................
பழையபடியே புறப்படுகிறது
தன்குவளைகளை நிரப்ப
தனியாக............

1 comment: